| | ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து | 10. | வாழே மென்றலு மரிதே தாழாது | | செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயி னன்றும னென்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் | 15. | பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே. (53) |
திணையும் துறையு மவை. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.
உரை: முதிர் வார் இப்பி முத்த வார் மணல் - முற்றி நீண்ட சிப்பிக் கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்கு பட்ட மணற்கண்ணே; கதிர் விடுமணியின் கண்பொரு மாடத்து - ஒளி விடுகின்ற மணிகளாற் கண்ணைப் பொருகின்ற மாடத்திடத்து; இலங்கு வளை மகளிர் தெற்றியாடும் - விளங்கிய வளையையுடைய மகளிர் வேதிகைக்கண்ணே விளையாடும்; விளங்குசீர் விளங்கில் - விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்கு; விழுமம் கொன்ற - பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த; களங் கொள் யானைக் கடுமான் பொறைய - போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானையையும் விரைந்த குதிரையையுமுடைய பொறைய; விரிப்பின் அகலும் - விரித்துச் சொல்லிற் பரக்கும்; தொகுப்பின் எஞ்சும் - தொகுத்துச் சொல்லிற் பொருள் ஒழிவுபடு மாகலான்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு - மயக்கம் பொருந்திய நெஞ்சையுடைய எங்களுக்கு; ஒரு தலை கைம்முற்றல நின் புகழ் என்றும் - ஒரு தலையாக முடியா நினது புகழ் எந்நாளும்; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து - கல்வியால் விளக்கமுடையோர் பிறந்த இப் பெரிய இடத்தையுடைய வுலகத்தின் கண்ணே; வாழேம் என்றலும் அரிது - வாழே மென் றிருத்தலும் கூடாது; தாழாது - விரைய; செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் - பல பொருள்களையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்; இன்று உளனாயின் நன்று மன் என்ற - இன்று உளனாகப் பெறின் நன்று அது பெற்றிலேன் என்று சொல்லிய; நின் ஆடு கொள்வரிசைக்கு ஒப்ப - நினது வென்றி கொண்ட சிறப்பிற்குப் பொருந்த; பாடுவன்மன் - பாடுவேன்; பகைவரைக் கடப்பு - நீ பகைவரை வென்ற வெற்றியை எ-று.
மாடத்து மகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண்ணாடும் விளங்கில் என்க. தெற்றி யென்பதனைக் கை கோத்தாடும் குரவை யென்பாரு முளர். பொறைய, கபிலன் இன்றுளனாயின் நன்று மன் னென்ற நின் ஆடு கொள். |