| | தோல்பெயரிய வெறுழ் முன்பின் எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் நல்ல |
10. | இல்லவா குபவா லியல்தேர் வளவ | | தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.(7) | திணை: வஞ்சி. துறை - கொற்றவள்ளை;மழபுல வஞ்சியுமாம். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
உரை: களிறு கடைஇய தாள் -களிற்றைச் செலுத்திய தாளையும்; கழல் உரீஇய திருந்தடி - வீரக்கழல் உரிஞ்சிய இலக்கணத்தால் திருந்திய அடியினையும்; கணை பொருது - அம்பொடு பொருது; கவி வண் கையால் - இடக்கவிந்த வள்ளிய கையுடனே; கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து - கண்ணிற்கு விளங்கும் அழகினையுடைய வில்லையும்; மாமறுத்த மலர் மார்பின் - திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய பரந்த மார்பினையும்; தோல் பெயரிய எறுழ் முன்பின் - யானையைப் பெயர்த்த மிக்க வலியினையுமுடைய; எல்லையும் இரவும் எண்ணாய் - பகலும் இரவும் எண்ணாது, பகைவர் ஊர் சுடு விளக்கத்து - பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின் கண்ணே; தங்கள் அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை - தம் சுற்றத்தை யழைத்தலுடனே அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடைய;ஆகலின்- ஆதலான்; நல்ல இல்ல ஆகுபவால் - நல்ல பொருள்கள் இல்லையாகுவனவால்; இயல் தேர் வளவ - இயற்றப்பட்ட தேரையுடைய வளவ; தண் புனல் பரந்த பூசல் - குளிர்ந்த நீர் பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை; மண் மறுத்து - மண் மறுத்தலான்; மீனிற் செறுக்கும் - மீனாலடைக்கும்; யாணர் பயன் திகழ் வைப்பின் - புது வருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய, பிறர் அகன்றலை நாடு - மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ-று.
திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடி யெனினு மமையும். கணைபொரு தென்றது, அதனொடு மருவுதலை. தாளையும் அடியையும் கையுடனே சாபத்தையும் மார்பையும் முன்பையுமுடைய வளவ, நீ கொள்ளை மேவலையாகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல வாகுப வெனக் கூட்டுக. நாடு நல்ல இல்ல வாகுபவென இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்துமேலேறி நின்றது. |