| திடைப்புரைப்பற்றிப் பிணிவிடாஅ ஈக்குழாத்தோ டிறைகூர்ந்த |
5 | பேஎற்பகையென வொன்றென்கோ |
| உண்ணாமையி னூன்வாடித் தெண்ணீரிற் கண்மல்கிக் கசிவுற்றவென் பல்கிளையொடு பசியலைக்கும் பகையொன்றென்கோ |
10 | அன்னதன்மையு மறிந்தீயார் |
| நின்னதுதாவென நிலைதளர மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற் குரங்கன்னபுன் குறுங்கூளியர் பரந்தலைக்கும் பகையொன்றென்கோ |
15 | ஆஅங், கெனைப்பகையு மறியுநனாய் |
| எனக்கருதிப் பெயரேத்தி வாயாரநின் னிசைநம்பிச் சுடர்சுட்ட சுரத்தேறி இவண்வந்த பெருநசையேம் |
20 | எமக்கீவோர் பிறர்க்கீவோர் |
| பிறர்க்கீவோர் தமக்கீபவென அனைத்துரைத்தனன் யானாக நினக்கொத்தது நீநாடி நல்கினை விடுமதி பரிசி லல்கலும் |
25 | தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை |
| நுண்பல மணலினு மேத்தி உண்குவம் பெருமநீ நல்கிய வளனே. (136) |