பக்கம் எண் :

29

    

மேற்கொள்ளாமையும், குற்றஞ்செய்தாரை நன்காராய்ந்து ஒறுத்தலும்,
அடியடைந்தாரை ஏற்றலும், மனைவாழ்வில் இன்புறுதலும் உடையனாய்,
முன்செய்து பின்னிரங்காவினையும் நாடு முழுதும் பரந்த நல்லிசையும்
கொண்டு சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார்.

 வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
 5.வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற்
 றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மன்னர்
 10. மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
  செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. (10)

     திணையும்  துறையும் அவை. சோழன் நெய்தலங்கானல்
இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

     உரை:
வழிபடுவோரை வல் அறிதி - நின்னை வழிபட்டொழுகு
வோரை விரைய அறிவை; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை -
பிறருடைய குற்றம் சொல்லுவாரது வார்த்தையைத் தெளியாய்; நீ
மெய்கண்ட தீமை - நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து
அறுதியிடப்பட்ட கொடுமையை; காணின் - ஒருவன்பாற் காணின்;
ஒப்ப நாடி - அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து; அத் தக ஒறுத்தி
- அத் தீமைக்குத் தகத் தண்டம் செய்வை; வந்து அடி பொருந்தி -
வந்து நின் பாதத்தையடைந்து; முந்தை நிற்பின் முன்னே
நிற்பாராயின்;பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி - அவர்
பிழை செய்வதற்குமுன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக
அவரைச் செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்து அட்டு -
அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று; ஆனா - உண்ணவுண்ண
வமையாத; கமழ் குய் யடிசில் - மணங்கமழும் தாளிப்பையுடைய
அடிசிலை; வருநர்க்கு வரையா - விருந்தினர்க்கு மிகுதி
குறைபடாமல் வழங்கும்; வசையில் வாழ்க்கை -பழி தீர்ந்த மனை
வாழ்க்கையையுடைய;மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர்
முயக்கத்தால்மாறுபடுத்தலல்லது; மள்ளர்