| 20 | மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக் | | கோவெனப் பெயரிய காலை யாங்கது தன்பெய ராகலி னாணி மற்றியாம் நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர் வேட்டுவ ரில்லை நின்னொப் போரென | 25 | வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் | | தானுயிர் செகுத்த மானிணப் புழுக்கோ டானுருக் கன்ன வேரியை நல்கித் தன்மலைப் பிறந்த தாவி னன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் | 30 | சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை | | ஓங்கிருங் கொல்லிப் பொருநன் ஓம்பா வீகை விறல்வெய் யோனே. (152) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் விடை. வல்விலோரியை வன்பரணர் பாடியது.
உரை: வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி - ஆனையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு; பேழ் வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇ - பெரிய வாயையுடைய புலியை இறந்துபாட்டை யுறுவித்து; புழல் தலைப் புகர்க் கலை உருட்டி - துளை பொருந்திய கோட்டை யுடைத்தாகிய தலையினையுடைய புள்ளிமான் கலையை யுருட்டி; உரல் தலைக்கேழற் பன்றி வீழ - உரல்போலுந் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து; அயலாது - அதற்கு அயலதாகிய; ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் - ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும்; வல்வில் வேட்டம் வளம்படுத் திருந்தோன் - வல் வில்லா லுண்டாய வேட்டத்தை வென்றிப் படுத்தி யிருந்தவன்; புகழ் சால் சிறப்பின் அம்பு - புகழமைந்த சிறப்பினையுடைய அம்பு; மிகத்திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் - ஏத் தொழிலிலே மிகச் சென்றுறுதற்குக் காரணமாகிய கொலைவன் யாரோ தான் கொலைவன்; மற்று இவன் விலைவன் போலான் - மற்று இவன் விலை யேதுவாகக் கொன்றானாகமட்டான்; வெறுக்கை நன்கு உடையன் - செல்வத்தை மிக வுடையனாயிருந்தான்; ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் - சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த மார்பினையுடைய; சாரல் அருவிப் பய மலைக் கிழவன் - சாரற்கண்ணே அருவியையுடைய பயன் படு மலைக்குத் தலைவனாகிய; ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ - ஓரியோஅல்லனோதான், |