பக்கம் எண் :

321

 
20மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக்
 கோவெனப் பெயரிய காலை யாங்கது
தன்பெய ராகலி னாணி மற்றியாம்
நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர்
வேட்டுவ ரில்லை நின்னொப் போரென
25வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
 தானுயிர் செகுத்த மானிணப் புழுக்கோ
டானுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
30சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை
 ஓங்கிருங் கொல்லிப் பொருநன்
ஓம்பா வீகை விறல்வெய் யோனே.
  (152)

     திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் விடை.
வல்விலோரியை வன்பரணர் பாடியது.

    உரை: வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி - ஆனையைக்
கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு; பேழ் வாய்
உழுவையைப் பெரும் பிறிது உறீஇ - பெரிய வாயையுடைய புலியை
இறந்துபாட்டை யுறுவித்து; புழல் தலைப் புகர்க் கலை உருட்டி -
துளை பொருந்திய கோட்டை யுடைத்தாகிய தலையினையுடைய
புள்ளிமான் கலையை யுருட்டி; உரல் தலைக்கேழற் பன்றி வீழ -
உரல்போலுந் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து;
அயலாது - அதற்கு அயலதாகிய; ஆழல் புற்றத்து உடும்பில்
செற்றும் - ஆழ்தலையுடைய புற்றின்கட் கிடக்கின்ற உடும்பின்கட்
சென்று செறியும்; வல்வில் வேட்டம் வளம்படுத் திருந்தோன் - வல்
வில்லா லுண்டாய வேட்டத்தை வென்றிப் படுத்தி யிருந்தவன்;
புகழ் சால் சிறப்பின் அம்பு - புகழமைந்த சிறப்பினையுடைய அம்பு;
மிகத்திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் - ஏத்
தொழிலிலே மிகச் சென்றுறுதற்குக் காரணமாகிய கொலைவன் யாரோ
தான் கொலைவன்; மற்று இவன் விலைவன் போலான் - மற்று இவன்
விலை யேதுவாகக் கொன்றானாகமட்டான்; வெறுக்கை நன்கு
உடையன் - செல்வத்தை மிக வுடையனாயிருந்தான்; ஆரம் தாழ்ந்த
அம் பகட்டு மார்பின் - சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த
மார்பினையுடைய; சாரல் அருவிப் பய மலைக் கிழவன் -
சாரற்கண்ணே அருவியையுடைய பயன் படு மலைக்குத் தலைவனாகிய;
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ - ஓரியோ
அல்லனோதான்,