பக்கம் எண் :

342

 

     உரை: உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த - உட்குப்
பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட; முளி புல்
கானம் குழைப்ப - முளிந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப; கல்லென
அதிர் குரல் ஏயொடு துளிசொரிந் தாங்கு - கல்லென ஓசையுண்டாக
நடுக்கத்தைச் செய்யும் ஓசையையுடைய உரு மேற்றுடனே கூடித்
துளியைப் பொழிந்தாற்போல; பசி தினத்திரங்கிய கசிவுடை யாக்கை -
பசி தின்னப்பட்டு உலர்ந்த வேர்ப்புடைய உடம்பு; அவிர் புகுவு
அறியாதாகலின் - அவிழ் புகுவதறியாதாகலால்; வாடிய நெறி கொள்
வரிக் குடர் குளிப்ப - வாட்டமுற்ற முடக்கங்கொண்ட வல
வரியையுடைய குடர் தன் கண்ணே மூழ்கும் பரிசு குளிர; குய் கொள்
கொழுந்துவை நெய்யுடை அடிசில் - தாளிப்புச் சேரப்பட்ட கொழுவிய
துவையோடு கூடிய நெய்யுடைய அடிசிலை; மதி சேர் நாண் மீன்
போல - திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை யொப்ப; நவின்ற
சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇ - பயின்ற பொன்னாற் செய்யப்பட்ட
சிறிய நல்ல கலங்களைச் சூழ வைத்திருத்தி யூட்டி; கேடின்றாக
பாடுநர் கடும் பென - கேடு இல்லையாகப் பாடுவாரது சுற்றம் எனச்
சொல்லி; அரிது பெறு பொலங்கலம் எளிதினின் வீசி - பெறுதற்கரிய
பொன்னாற் செய்யப்பட்ட அணிகலங்களை யெளிதாக வழங்கி;
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் - தன்னுடைய நட்டோரினும்
எம்மோடு நட்புச் செய்த நல்ல புகழையுடைய குமணன்; மட்டார்
மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய குமணன்;
மாட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய
முதிரமென்னும் மலையிடத்தான்; செல்குவை யாயின் பெரிது நல்குவன்
என - நீ அவன்பாற் செல்வையாயின் நினக்கு மிகவுந் தருவ னென;
பல் புகழ் நுவலுநர் கூற - நினது பல புகழையும் சொல்லுவார்
சொல்ல; வல் விரைந்து உள்ளம் துரப்ப வந்தனென் - அதுகேட்டுக்
கடிதாக விரைந்து எனது உள்ளம் செலுத்துதலான் வந்தேன்; இல்
உணா துறத்தலின் - எனது மனை உண்ணப்படுவனவற்றைக்
கைவிடுதலான்; எள்ளுற்று இல் மறந்து உறையும் - அம் மனையை
யிகழ்ந்து நினையாது உறைகின்ற; புல்லுளைக் குடுமிப் புதல்வன் -
புல்லிய உளைமயிர்போலும் குடுமியை யுடைய புதல்வன்; பன் மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் - பல படியும்
பாலில்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்; கூழும்
சோறும் கடைஇ - கூழையும் சோற்றையும் வேண்டி முடுகி; ஊழின்
- முறை முறையே; உள்ளில் வறுங்கலம் திறந்து அழக்கண்டு -
உள்ளொன்றில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து - அங்கு ஒன்றும்
காணாது அழ அதனைப் பார்த்து; மறப் புலி உரைத்தும் -
மறத்தையுடைய புலியை வரவு சொல்லி அச்ச முறுத்தியும்;