| | வடிநவி லம்பின் வில்லோர் பெரும கைவள் ளீகைக் கடுமான் கொற்ற வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப் பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் | 20 | பாடுப வென்ப பரிசிலர் நாளும் | | ஈயா மன்னர் நாண வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (168) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசிற்றுறை: இயன்மொழியும், அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது.
உரை: அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலை - அருவி ஒலித்திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; கறி வளர் அடுக்கத்து - மிளகு கொடி வளரும் மலைச்சாரலினிடத்து; மலர்ந்த காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி - மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக்கிளறி; கிளையொடு - தன் இனத்தோடே கூட; கடுங்கண் கேழல் உழுத பூழி - தறுகண்மையையுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே; நன்னாள் வரு பதம் நோக்கி - நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து; குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை - குறவர் அந்நிலம் உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய தினை; முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் - முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின்கண்ணே புதிதுண்ண வேண்டி; மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் - மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான்தடி புழுக்கிய புலவு நாறு குழிசி - மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; வான் கேழ் இரும்புடை கழாஅது ஏற்றி - நிணந்தோய்ந்த வெளிய நிறத்தினையுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி; சாந்த விறகின் உவித்த புன்கம் - சந்தன விறகான் உவிக்கப்பட்ட சோற்றை; கூதளம் கவினியகுளவி முன்றில் - கூதாளி கவின் பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; செழுங் கோள் வாழை அகல் இலை பகுக்கும் - வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற இலைக்கண்ணே பலருடனே பகுத்துண்ணும்; ஊராக் குதிரைக் கிழவ - ஊரப்படாத குதிரை யென்னும் மலைக்குத் தலைவ; கூர் வேல் - கூரிய வேலையும்; நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி - நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும்; வடி நவில்அம்பின் -வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய; |