பக்கம் எண் :

426

 
எம்மால் வியக்கப் படூஉ மோரே
10இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த
 குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்ன ராயினு மெம்வயிற்
பாடறிந் தொழுகும் பண்பி னாரே
15மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும்
 உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம்
நல்லறி வுடையோர் நல்குர
வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே.
(197)

     திணையுந் துறையு மவை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய
பெருந்திருமா  வளவன்  பரிசில்  நீட்டித்தானைக்  கோனாட்டு  
எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

     உரை: வளி  நடந் தன்ன  வாச் செலல் இவுளியொடு -
காற்று  இயங்  கினாற்போலும்   தாவுதலுடைத்தாகிய      
கதியையுடைய குதிரையொடு;  கொடி  நுடங்கும் மிசைய தேரினர்
எனாஅ - கொடி நுடங்கும் உச்சியையுடைய தேரினையுடைய
ரெனவும்; கடல் கண் டன்ன  ஒண்   படைத்   தானையொடு -
கடலைக் கண்டாற் போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய
சேனையுடனே; மலை மாறு மலைக்கும்களிற்றினர்  எனாஅ -
மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடைய ரெனவும்;  
உரும்   உரற்   றன்ன  உட்கு வரு முரசமொடு - இடி  
முழங்கினாற்போலும் அஞ்சத்தக்க முரசத்தோடு; செரு மேம்படூஉம்
- வென்றியர் எனாஅ - போரின் மேம்படும் வெற்றியையுடைய
ரெனவும்; மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் -நிலத்தைப்
பொருந்தின படையினையுடைய ஒள்ளிய பூணினையுடைய அரசர்;
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலம் - வெண் கொற்றக்
குடை நிழற்றப்படும் செல்வத்தை மதித்த லில்லேம்; எம்மால்
வியக்கப்படூஉமோர் - எங்களால் மதிக்கப்படுவோர்; இடு முள்
படப்பை - இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து; மறி மேய்ந்
தொழிந்த - மறி தின்ன வொழிந்து நின்ற; குறு நறு முஞ்ஞை
கொழுங்கண் குற்றடகு - குறிய நாற்றத்தினையுடைய முஞ்ஞையது
கொழுவிய கண்ணிற் கிளைக்கப்பட்ட குறிய இலையை; புன் புல
வரகின் சொன்றியொடு பெறூஉம் - புல்லிய நிலத்தில் விளைந்த
வரகினது சோற்றுடனே பெறுகின்ற; சீறூர் மன்ன ராயினும் - சிறிய
வூரையுடைய வேந்தராயினும்; எம் வயின் பாடறிந்தொழுகும்
பண்பினோர் - எம்மிடத்துச் செய்யும் முறைமையை யறிந்து நடக்கும்
குணத்தினையுடையோர்காண்;