பக்கம் எண் :

48

    
 காண்கு வந்திசிற் பெரும ஈண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
35.தேனிறை கொள்ளு மிரும்பல் யானை
 உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானே யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
40.வரையா வீகைக் குடவர் கோவே. (17)

     திணை : வாகை. துறை:  அரசவாகை;  இயன்மொழியுமாம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற்
பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை வலிதிற்
போய்க் கட்டி லெய்தினானைக்  குறுங்கோழியூர்  கிழார்  பாடியது.

     உரை: தென் குமரி - தென்றிசைக்கட் கன்னியும்; வட பெருங்
கல் - வடதிசைக்கண் இமயமும்; குண  குட  கடல்  எல்லையா -
கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக;
குன்று மலை காடு நாடு - நடுவுபட்ட நிலத்துக் குன்றமும் மலையும்
காடும் நாடும் என இவற்றை யுடையோர்; ஒன்று பட்டு வழி மொழிய
- ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூற; கொடிது கடிந்து -தீத்தொழிலைப்
போக்கி; கோல் திருத்தி - கோலைச் செவ்விதாக்கி; படுவதுண்டு -
ஆறிலொன்றாகிய இறையை யுண்டு;பகல் ஆற்றி -நடுவுநிலைமையைச்
செய்து; இனி  துருண்ட  சுடர்  நேமி -  தடை  யின்றாகவுருண்ட
ஒளியையுடைய  சக்கரத்தால்;  முழுதாண்டோர்  வழி   காவல -
நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே;குலை இறைஞ்சிய
கோள் தாழை - குலை தாழ்ந்த கோட்புக்க தெங்கினையும்; அகல்
வயல் - அகன்ற  கழனியையும்;  மலை  வேலி -  மலையாகிய
வேலியையும்;  நிலவு  மணல் வியன் கானல் - நிலாப்  போன்ற
மணலையுடைய அகன்ற கடற் கரையையும்;  தெண்  கழி  மிசைச்
சுடர்ப்    பூவின் -   தெளிந்த   கழியிடத்துத்   தீப்போலும்
பூவினையுமுடைய; தண் தொண்டியோர் அடு பொருந - குளிர்ந்த
தெண்டியி லுள்ளோருடைய அடு பொருந; - மாப் பயம்பின் பொறை
போற்றாது - யானை படுக்கும் குழிமேற் பாவின பாவைத் தன் மனச்
செருக்கால் பாதுகாவாது; நீடு குழி அகப்பட்ட அழத்தால் - நெடிய
குழியின் கண்ணே அகப்பட்ட; பூடுடைய எறுழ் முன்பின் -
பெருமையை யுடைத்தாகிய மிக்க வலிமையுடைய; கோடு முற்றிய
கொல் களிறு - கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு; நிலை கலங்கக்
குழி கொன்று - அதன் நிலைசரியக் குழியைத் தூர்த்து; கிளை புகல
- தன் இனம் விரும்ப; தலைக்கூடி யாங்கு தன்னினத்திலே சென்று
பொருந்தினாற்போல; அரு முன்பின்