| காண்கு வந்திசிற் பெரும ஈண்டிய மழையென மருளும் பஃறோன் மலையெனத் | 35. | தேனிறை கொள்ளு மிரும்பல் யானை | | உடலுந ருட்க வீங்கிக் கடலென வானீர்க் கூக்குந் தானே யானாது கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப இடியென முழங்கு முரசின் | 40. | வரையா வீகைக் குடவர் கோவே. (17) |
திணை : வாகை. துறை: அரசவாகை; இயன்மொழியுமாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை: தென் குமரி - தென்றிசைக்கட் கன்னியும்; வட பெருங் கல் - வடதிசைக்கண் இமயமும்; குண குட கடல் எல்லையா - கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக; குன்று மலை காடு நாடு - நடுவுபட்ட நிலத்துக் குன்றமும் மலையும் காடும் நாடும் என இவற்றை யுடையோர்; ஒன்று பட்டு வழி மொழிய - ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூற; கொடிது கடிந்து -தீத்தொழிலைப் போக்கி; கோல் திருத்தி - கோலைச் செவ்விதாக்கி; படுவதுண்டு - ஆறிலொன்றாகிய இறையை யுண்டு;பகல் ஆற்றி -நடுவுநிலைமையைச் செய்து; இனி துருண்ட சுடர் நேமி - தடை யின்றாகவுருண்ட ஒளியையுடைய சக்கரத்தால்; முழுதாண்டோர் வழி காவல - நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே;குலை இறைஞ்சிய கோள் தாழை - குலை தாழ்ந்த கோட்புக்க தெங்கினையும்; அகல் வயல் - அகன்ற கழனியையும்; மலை வேலி - மலையாகிய வேலியையும்; நிலவு மணல் வியன் கானல் - நிலாப் போன்ற மணலையுடைய அகன்ற கடற் கரையையும்; தெண் கழி மிசைச் சுடர்ப் பூவின் - தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடைய; தண் தொண்டியோர் அடு பொருந - குளிர்ந்த தெண்டியி லுள்ளோருடைய அடு பொருந; - மாப் பயம்பின் பொறை போற்றாது - யானை படுக்கும் குழிமேற் பாவின பாவைத் தன் மனச் செருக்கால் பாதுகாவாது; நீடு குழி அகப்பட்ட அழத்தால் - நெடிய குழியின் கண்ணே அகப்பட்ட; பூடுடைய எறுழ் முன்பின் - பெருமையை யுடைத்தாகிய மிக்க வலிமையுடைய; கோடு முற்றிய கொல் களிறு - கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு; நிலை கலங்கக் குழி கொன்று - அதன் நிலைசரியக் குழியைத் தூர்த்து; கிளை புகல - தன் இனம் விரும்ப; தலைக்கூடி யாங்கு தன்னினத்திலே சென்று பொருந்தினாற்போல; அரு முன்பின்
|