பக்கம் எண் :

53

    

கிடக்கின்ற அகன்ற வுலகத்தை; தாளின் தந்து - தமது முயற்சியாற்
கொண்டு; தம் புகழ் நிறீஇ - தம்முடைய புகழை யுலகத்தின் கண்ணே
நிறுத்தி; ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல் - தாமே ஆண்ட
வலியோருடைய வழித்தோன்றினோய்; ஒன்று பத்து அடுக்கிய கோடி
கடை இரீஇய - ஒன்றைப் பத்து முறையாக அடுக்கப்பட்டதாகிய
கோடி யென்னும் எண்ணினைக் கடையெண்ணாக இருத்திய;
பெருமைத்தாக நின் ஆயுள் - சங்கு முதலாகிய பேரெண்ணினை
யுடைத்தாக நினது வாழ்நாள்; நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி - நீரின்
கண்ணேயுறத் தாழ்ந்த குறிய காஞ்சியினது; பூக் காதூஉம் இன
வாளை - பூவைக் கவரும் இனமாகிய வாளையினையும்; நுண்ணாரல்-
நுண்ணிய ஆரலினையும்; பருவரால் - பரிய வராலினையும்; குரூஉக்
கெடிற்ற - நிறமுடைய கெடிற்றினையு முடைத்தாகிய; குண்டு அகழி-
குழிந்த கிடங்கினையும்; வான் உட்கும் வடி நீண் மதில் - வான
மஞ்சும் திருந்திய நெடிய மதிலையு முடைத்தாகிய; மல்லல் மூதூர்
வயவேந்தே - வளவிய பழைய ஊரினையுடைய வலிய வேந்தே;
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் - நீ போகக் கடவ
மறுமை யுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும்; ஞாலம்
காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் -
உலகத்தைக் காப்பாரது தோள் வலியைக் கெடுத்து நீ ஒருவனுமே
தலைவனாதலை விரும்பினும்; சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்
- மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும்;
அதன் தகுதி கேள் இனி - அவ் வேட்கைக்குத் தக்க
செய்கையைக்கேட்பாயாக இப் பொழுது - மிகுதியாள - பெரியோய்;
நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் - நீரை யின்றியமையாத
உடம்பிற்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் -
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டு முதற்று
உணவின் பிண்டம் - உணவை முதலாக வுடைத்து அவ்வுணவா
லுளதாகிய உடம்பு; உணவெனப் படுவது நிலத்தொடு நீர் - ஆதலால்
உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; நீரும் நிலனும்
புணரியோர் - அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்;
ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் - இவ்வுலகத்து
உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; வித்தி வான் நோக்கும்
புன் புலம் - நெல் முதலாய வற்றை வித்தி மழையைப்
பார்த்திருக்கும் புல்லிய நிலம்; கண்ணகன் வைப்பிற் றாயினும் - இட
மகன்ற நிலத்தையுடைத்தாயினும்; நண்ணி யாளும் இறைவன் தாட்கு
உதவாது - அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப்
பயன்படாது; அதனால் - ஆதலால்; அடு போர்ச் செழிய -
கொல்லும்  போரையுடைய செழிய; இகழாது - இதனைக்
கடைப்பிடித்து; வல்லே - விரைந்து; நிலன் நெளி மருங்கின் - நிலம்
குழிந்த