| மாலைவெண் குடைநீழலான் வாண்மருங்கிலோர் காப்புறங்க அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த |
15. | ஆய்கரும்பின் கொடிக்கூரை |
| சாறுகொண்ட களம்போல வேறுவேறு பொலிபு தோன்றக் குற்றானா வுலக்கையாற் கலிச்சும்மை வியலாங்கட் |
20. | பொலந்தோட்டுப் பைந்தும்பை |
| மிசையலங் குளைய பனைப்போழ் செரீ இச் சினமாந்தர் வெறிக்குரவை ஓத நீரிற் பெயர்பு பொங்க வாய்காவாது பரந்துபட்ட |
25. | வியன்பாசறைக் காப்பாள |
| வேந்துதந்த பணிதிறையாற் சேர்ந்தவர் கடும்பார்த்தும் ஓங்குகொல்லியோ ரடுபொருந வேழ நோக்கின் விறல்வெஞ் சேஎய் |
30. | வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே |
| நிற்பாடிய வலங்கு செந்நாப் பிறரிசை நுவலாமை ஓம்பா தீயு மாற்ற லெங்கோ மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே |
35. | புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் |
| தினிது கண்டிசிற் பெரும முனிவிலை வேறுபுலத் திறுக்குந் தானையொடு சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே. (22) |