பக்கம் எண் :

9

    

உரை:  உவவுமதி உருவின்-உவாநாளின் மதியினது
வடிவு போலும் வடிவினையுடைய; ஓங்கல் வெண்குடை-
உயர்ந்த வெண்கொற்றக் குடை; நிலவுக் கடல் வரைப்பின்
மண்ணகம் நிழற்ற-நிலைபெற்ற  கடலெல்லைக்கண்
நிலத்தை நிழற்செய்ய; ஏம முரசம் இழுமென முழங்க-
காவலாகிய வீரமுரசம் இழுமெனமுழங்கும்
ஓசையையுடைத்தாய் முழங்க; நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
-சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்;
தவிரா ஈகை-ஒழியாத வண்மையினையுமுடைய;
கவுரியர் மருக-பாண்டியர் மரபினுள்ளாய்; செயிர்தீர்
கற்பின் சேயிழை கணவ-குற்றமற்ற கற்பினையுடைய
சேயிழைக்குத் தலைவ; பொன் ஓடைப் புகர் அணி
நுதல்-பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த
மத்தகத்தினையும்; துன்னருந் திறல்-அணுகுதற் கரிய
வலியையும்;கமழ்கடா அத்து-மணநாறும் மதத்தினையும்;
கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்-கயிற்றாற்
பிணித்தலைச் செய்த கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும்;
பெருங்கை-பெருங்கையையுமுடைய; எயிறு படையாக
-கொம்பு படைக்கலமாகக் கொண்டு; எயிற் கதவிடா
-பகைவர் மதிலின்கட் கதவைக் குத்தி;யானை இரும்பிடர்த்
தலையிருந்து-யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து;
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா-பரிகாரமில்லாத
கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத;
கருங்கை ஒள்வாள்-வலிய கையின்கண்ணே ஒள்ளிய
வாளினையுடைய; பெரும்பெயர் வழுதி-; நிலம் பெயரினும்
நின்சொல் பெயரல்-நிலம் பிறழினும் நினது ஆணையாகிய
சொல் பிறழா தொழியல் வேண்டும்; பொலங் கழற்கால்-
பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்;
புலர்சாந்தின் விலங்கு அகன்ற வியன்மார்ப-பூசிப் புலர்ந்த
சந்தனத்தை யுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு
முடையோய்; ஊர்இல்ல-ஊரில்லாதனவும்; அரிய உயவ-
பொறுத்தற்கரிய உயங்குதலை யுடையனவும்; நீரில்ல-
நீரில்லாதனவும்; நீள்இடைய-நீண்ட வழியனவுமாகிய;
பார்வல் இருக்கை-வம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே
பார்த்திருக்கும் இருப்பினையும்; கவி கண் நோக்கின்-கையாற்
கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும்;
செந்தொடை பிழையாவன்கண்-செவ்விய  தொடை பிழையாத
தறுகண்மையையுமுடைய; ஆடவர்-மறவர்தம்; அம்பு விட
வீழ்ந்தோர்வம்பப் பதுக்கை-அம்பை விடுதலாற் பட்டோரது
உடல் மூடிய புதிய கற்குவையின்மேலே; திருந்து சிறை
வளைவாய்ப் பருந்து-திருந்திய சிறகினையும் வளைந்த
வாயினையுமுடைய பருந்து; இருந்து உயவும்-இருந்து வருந்தும்;
உன்ன மரத்த துன்னருங்கவலை-உன்ன மரத்தினை
யுடையவாகிய அணுகுதற்