பக்கம் எண் :

96

    
 இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே.
(34)

     திணை: பாடாண்டிணை.   துறை:   இயன்மொழி.   சோழன்
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

     உரை: ஆன் முலை அறுத்த அற னிலோர்க்கும் - ஆனினது
முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண்
இழை   மகளிர்   கரு   சிதைத்தோர்க்கும் -  மாட்சிமைப்பட்ட
ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்;
குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் - தந்தை தாயாரைப் பிழைத்த
கொடுந் தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும்
உள என - அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப்
போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் -
நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு
உய்தி இல்லென - ஒருவன் செய்த நன்றியைச்  சிதைத்தோர்க்கு
நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று - அற நூல் கூறிற்று;
ஆயிழை கணவ - தெரிந்த ஆபரணத்தை யுடையாள் தலைவ;காலை
யந்தியும்  மாலை  யந்தியும் - காலையாகிய  அந்திப்  பொழுதும்
மாலையாகிய அந்திப் பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின்
- புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது
அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி - பாலின்கட் பெய்து
அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ்
சூடு   கிழித்த   ஒக்கலொடு   -  குறிய  முயலினது  கொழுவிய
சூட்டிறைச்சியைத் தின்ற என்  சுற்றத்தோடு  கூட;  இரத்தி  நீடிய
அகன்றலை   மன்றத்து  -  இலந்தை   மரமோங்கிய   அகன்ற
இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு-ஒன்றனையும்
மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி - வேண்டி
வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக்கொழுஞ் சோறு ஆர்ந்த
பாணர்க்கு - பெரிய கட்டியாகிய கொழுவிய  சோற்றை  யருந்திய
பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்  -  நீங்காத
செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க
என்று - எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று
சொல்லி; நின் பீடு  கெழுநோன்றாள்  பாடேனாயின் -  நினது
பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல்
கதிர்ச் செல்வம் படுபறியலனே - வாழ்நாட் கலகாகிய பல
கதிரையுடைய   செல்வன் தோன்றுத லறியான்; யானோ