| | கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக் கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர் அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப் | 5 | பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ | | டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும் அகனாட் டண்ணல் புகாவே நெருநைப் பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே | 10 | அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை | | உயர்நிலை யுலக மவன்புக வார நீறாடு சுளகிற் சீறிட நீக்கி அழுத லானாக் கண்ணள் மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே. |
திணையும் துறையு மவை...தும்பைச்சொகினனார் பாடியது.
உரை: கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப - கதிர் நுனைபோலும் மூக்கையுடைய ஆரல்மீன் சேற்றின்கீழே செருக; கணைக்கோட்டு வாளை நீர் மீப் பிறழ - திரண்ட கோட்டையுடைய வாளைமீன் நீர்மேலே பிறழ; எரிப்பூம் பழனம் நெரித்து - எரிபோலும் நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி; உடன் - உடனே; வலைஞர் - வலைஞரானவர்; அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர - ஒலி நிரம்பா ஓசையையுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழ; பனை நுகும்பன்ன சினை முதிர் வராலொடு - பனையினது நுகும்பையொத்த சினைமுற்றிய வராலோடு; உறழ் - மாறுபடும்; வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் - வேல்போன்ற ஒள்ளிய கயலை மகந்துகொள்ளும்; அகல் நாட்டண்ணல் புகா - முன் அகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு; நெருநை - நெருநலை நாளால்; பகல் இடம் கண்ணி - பகுத்த இடத்தைக் கருதி, பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்றுமன் - பலருடனே இயைந்து ஒருவழிப்பட்டது. அது கழிந்தது; இன்று-; அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை - தன்கண்ணே யடங்கிய கற்பினையும் சிறிய நுதலினையுமுடைய மடந்தை; உயர்நிலை யுலகம் அவன புக வார - உயர்ந்த நிலைமையையுடைய விண்ணுலகத்தை அவன் சென்று புக அவனுக்கு உணவு கொடுத்தல் வேண்டி; நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி - புழுதியாடிய சுளகளவாகிய சிறியவிடத்தைத் துடைத்து; அழுதலானாக் கண்ணள் - அழுதலமையாத |