| பாய்ந்தோடும், என அவ் வன்புலத்தியல்பை இப் பாட்டில் அழகுறக் கூறியுள்ளார்.
| உழுதூர் காளை யூழ்கோ டன்ன கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும் புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் | 5. | பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய | | மன்றிற் பாயும் வன்புலத் ததுவே கரும்பி னெந்திரஞ் சிலைப்பி னயல திருஞ்சுவல் வாளை பிறழு மாங்கட் டண்பணை யாளும் வேந்தர்க்குக் | 10. | கண்படை யீயா வேலோ னூரே |
திணையும் துறையு மவை. ஆவூர் கிழார் பாடியது.
உரை: உழுதூர் காளை யூழ்கோடு அன்ன - நிலத்தை யுழுததனால் ஓய்ந்த நடை கொண்டு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்புபோல்; கவைமுள் கள்ளி பொரியரைப் பொருந்தி - கவைத்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப் பகுதியைப் பொருந்தி யிருந்து; புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் - புதிது விளைந்த வரகை யரிந்தபின் உண்டாகிய அரிகாலின்கண் வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்குச் செவ்விபார்க்கும்; புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பின் புல்லிய தலையையுடைய சிறுவர்கள் கையில் வில்லையெடுத்துக் கொண்டு ஆரவாரிப்பராயின; பெருங்கண் குறு முயல் - பெரிய கண்ணையுடைய குறுமுயல்; கருங்கலன் உடைய மன்றில் பாயும் - கரிய புறத்தையுடைய மட்கலங்கள் உருண்டுடைந்து கெடமன்றிலே பாய்ந்தோடும்; வன்புலத்தது - வன்புலத்தின் கண்ணே யுளது; கரும்பின் எந்திரம் சிலைப்பின் - கரும்பாட்டும் ஆலை யொலிக்குமாயின்; அயலது - அயலதாகிய நீர்நிலையிலுள்ள; இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண் - பெரிய பிடரையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் அழகிய இடத்தையுடைய; தண்பணையாளும் வேந்தர்க்கு - குளிர்ந்த மருதநிலத்தூர்களை யாட்சி செய்யும் அரசர்கட்கு; கண்படை ஈயா வேலோன் ஊர் - கண்ணுறக்கத்தை யெய்தாமைக் கேதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையவன் ஊர்; எ - று.
ஊர் வன்புலத்தது என விளை முடிவு செய்க. கொம்பு முளையாத இளங்காளைகளை உழுதற்குப்பயன்படுத்தாராகலின், உழுதூர் காளையூழ் கோடு என்றார்; ஊர்தல், ஓய்ந்து நடத்தல். ஊழ்கோடென்றார். எருத்திலிட்ட நுகம் முகத்தே சரியாதவாறு தாங்கும் அளவாகத் தோன்றிய கோடு என்பது விளக்குதற்கு. பொரித்தாற்போல் பொருக்குடைய அரை, பொரியரை யெனப்பட்டது. புதுவரகறிந்த அரிகாலில் உதிர்ந்து கிடக்கும் |