பக்கம் எண் :

270

     
 களிறுங் கடிமரஞ் சேரா சேர்ந்த
 5.ஒளிறுவேன் மறவரும் வாய்மூழ்த் தனரே
 இயவரு மறியாப் பல்லயங் கறங்க
அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடி மூதூர்
அறனிலண் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
 10.முகைவனப் பேந்திய முற்றா விளமுலைத
 தகைவளர்த் தெடுத்த நகையொடு
பவைவளர்த் திருந்தவிப் பண்பி றாயே.

     திணை: காஞ்சி. துளை: மகட்பாற் காஞ்சி. பரணர் பாடியது.

     உரை: வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினன் - மகட்கொடை
விரும்பிய வேந்தனும் வெவ்விய சினமுடையன்: கடவன கழிப்பு இவள்
தந்தையும் செய்யான் - செய்யத்தக்க கடமைகளைச் செய்தலை இவள்
தந்தையும் செய்ய விரும்புகின்றிலன்; ஒளிறு முகத்து ஏந்திய வீங்குதொடி
மருப்பின் - விளங்குகின்ற முகத்தின்கண் உயர்ந்துள்ள பெரிய
தொடிகயணிந்த கோட்டினையுடைய; களிறும் கடிமரம சேரா - களிறுகளும்
கடிமரத்தைச் சேர்ந்து நில்லாவாயின். சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய்
மூழ்த்தனர் - வேந்தனும் தந்தையுமாகிய இருவரையும் சேர்ந்துள்ள
விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடியொன்றும் உரையாடாராயினர்;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க - வாச்சியக்காரராலும் அறியப்படாத
பல பல வாச்சியங்கள் முழங்க; இவ்வருங்கடி மூதூர் பெரும் பேதுற்றன்று -
இந்தக் கடத்தற்கரிய காவலையுடைய பழைமையான வூர் பெரிய பேதுற
வினை யெய்தியுள்ளது; அன்னோ - ஐயோ, விறன்மலை வேங்கை வெற்பின் -
விறல்படைத்த மலையாகிய வேங்கை மலையின்கண்; விரிந்த கோங்கின்
முகைவனப் பேந்திய முற்றா இளமுலை - பூவிரிந்த கோங்க மரத்தினுடைய
அரும்பினது வனப்புடைய முதிராத இள முலையினையுடைய மகளது; தகை
வளர்த்தெடுத்த நகையொடு - அழகு மிக வளர்த்தலால் உண்டாகிய
மகிழ்ச்சியினையும்; பகை வளர்த்திருந்த பண்பில் தாய் ஊர்க்குப் பகைவர்
மிகவுளாராக இருத்தலால் பண்பின்மையினையுமுடைய இத் தாய்; அறன்
இலள் மன்ற - அறப்பண்பில்லாள், ஒருதலையாக; எ - று.


     வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு சேரா; மறவர் வாய்
மூழ்த்தனர்; ஊர் பேதுற்றன்று; தாய் அறனிலள் எனக் கூட்டி வினை முடிவு
கொள்க. வேந்தற்குச் செய்யக்கடவனவும், மகட்கொடை வேண்டினார்க்குச்
செய்யக்கடவனவும் அடங்க, “கடவன” எனப்பட்டன. மகட்கொடையும்