| ஆர்கலி யினனே சோணாட் டண்ணல் மண்ணாள் செல்வ ராயினு மெண்ணார் கவிகை வாள்வலத் தொழியப் பாணரிற் பாடிச் சென்றார் வரறோ றகமலர் |
5. | பீத லானா விலங்கு தொடித் தடக்கைப் |
| பாரி பறம்பிற் பனிச்சுனை போலக் காண்டற் கரிய ளாகிய மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென |
10. | அகிலார் நறும்புகை யைதுசென் றடங்கிய |
| கபில நெடுநகர்க் கமழு நாற்றமொடு மனைச்செறிந் தனளே வாணுத லினியே அற்றன் றாகலிற் றெற்றெனப் போற்றிக் காய்நெற் கவளந் தீற்றிக் காவுதொறும் |
15. | கடுங்கண் யானை காப்பன ரன்றி |
| வருத லானார் வேந்தர் தன்னையர் பொருசமங் கடந்த வுருகெழு நெடுவேற் குருதி பற்றிய வெருவரு தலையர் மற்றிவர் மறனு மிற்றாற் றெற்றென |
20. | யாரா குவர்கொ றாமே நேரிழை |
| உருத்த பல்சுணங் கணிந்த மருப்பிள வளமுலை ஞெமுக்கு வோரே. |