| அவர்க்குக் குறிப்பாயுணர்த்தினான். அது கண்டு, கையறவுமிக்க கழாத்தலையார் இப் பாட்டினைப் பாடினார். இதன்கண், வேந்தே! களிறு பெறுவேமென்னின், அவை அம்பு பட்டுப் புண்ணுற்று வீழ்ந்தொழிந்தன: தேர் பெறலாமென்னின், அவை பீடழிந்து சிதைந்து நிலத்தே கிடக்கின்றன; குதிரைகளோ வெனின், அவை வாள்வடுப்பட்டுக் குருதி வெள்ளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன; இதனால் பெறற்குரிய பெருவளம் பெறாமையின் இரவலர் இரங்குவாராயினர். தடாரிப்பறையை யறைந்துகொண்டு யான் வந்தது நின் தோளிடத்தே அரவுபோற்சுற்றிக்கொண்டிருக்கும் ஆரத்தைப் பெறற்பொருட்டேபோலும் என ஆசிரியர் அவனது மறமாண்பும் கொடை நலமும் தோன்றப் பாடியுள்ளார். | களிறு முகந்து பெயர்குவ மெனினே ஒளிறுமழை தவிர்க்குங் குன்றம் போலக் கைம்மா வெல்லாங் கணையிடத் தொலைந்தன கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவ மெனினே | 5. | கடும்பரி நன்மான் வாங்குவயி னொல்கி | | நெடும்பீ டழிந்து நீலஞ்சேர்ந் கொய்சுவற் புரவி முகக்குவ மெனினே மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி வளிவழக் கறுத்த வங்கம் போலக் | 10. | குருதியம் பெரும்புணல் கூர்ந்தோழிந் தனவே, யாங்க | | முகவை யின்மையி னுகவை யின்றி இரப்போ ரிரங்கு மின்னா வியன்களத் தாளழிப் படுத்த வாளே ருழவ கடாஅ யானைக் கால்வழி யன்னவென் | 15. | தெடாரித் தெண்கண் டெறிர்ப்ப வொற்றிப் | | பாடி வந்த தெல்லாங் டூகாடியர் முழவுமரு டிருமணி மிடைந்ததோள் அரவுற ழார முகக்குவ மெனவே. |
திணை: வாகை. துறை: மறக்களவழி. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து ஆரம் கழுத்தினதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
உரை: களிறு முகந்து பெயர்குவம் எனினே - களிறுகளைத் தரப் பெற்றுச் செல்வேமென்று கருதினால்; ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம்போல - விளங்குகின்ற மழைமுகிலைத் தடுக்கும் குன்றுகளைப் போல; கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன - யானைக ளெல்லாம் நின் அம்புபட்டு இறந்தன; கொடுஞ்சி்நெடுந்தேர் முகக்குவம் எனின் - கொடுஞ்சியொடு கூடிய நெடிய தேர்களைத் தரக்கொண்டு செல்வோமென்றார்; கடும்பரி நெடுமான் வாங்கு வயின் ஒல்கி - கடிய |