பக்கம் எண் :

355

     

     உரை: அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது - அகன்ற இடத்
தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப்
பெறாமையால்; மரந்தலைச் சேர்ந்து - மன்றத் தின்கண் நிற்கும் வேப்ப
மரத்தின் அடியிலே இருந்து; பட்டினி வைகி - பட்டினி கிடந்த; போதவிழ்
அலரி நாரின் தொடுத்து - அரும்பு மலர்ந்த பூக்களை நாரால் மாலையாகத்
தொடுத்து; தயங்கு இரும்பித்தை பொலியச் சூடி - விளங்குகின்ற தலைமயிர்
அழகுறச்  சூடிக்கொண்டு;  பறை  யொடு  தகைத்த  வைத்த  பையை
யுடையேனாய்; முரவு வாய் ஆடுறு குழிசி பாடின்று தூக்கி - சிதைந்த
வாயையுடைய சமைத்தற்கமைந்த பானையைக் கெடாதபடி மெல்ல எடுத்து
வைத்து; மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப - மன்றத்தின் கண் நின்ற அந்த
வேம்பினது ஒள்ளிய பூவுதிரே; அரிசியின்மையின் - சோற்றுக்குரிய அரிசி
யில்லாமையாலே; குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன் - மிக
இன்றியமையாத வேறு எச் செயலையும் செய்ய விரும்பாது பொருள் நசையே
கொண்ட இருக்கையினை யுடையேனாய்; ஆரிடை நீந்தி - பின்பு அரிய
வழிகள் பல கடந்து; கூர் வாய் இரும்படை நீரின் மிளிர்ப்ப - கூரிய
வாயைுடை பெரிய வாட்படைகள் தம்முடைய நீர்மைப் படி மேலும்
கீழுமாகச்சுழல; வருகணை வாளி தம்மை நோக்கி - வரும் அம்புகளை;
....................அன்பின்று தலைஇ ......................அன்பின்றிப் பகைவரை ஏறட்டு
வேற்சென்று; இரை முரைசு ஆர்க்கும் உரைசால் பாசறை - ஒலிக்கின்ற முரசு
முழங்கும் புகழமைந்த பாசறைக்கண்ணே தங்கி; வில்லேர் உழவின் நின்
நல்லிசை யுள்ளி - வில்லை யேராகக் கொண்டு போராகிய உழவினைச்
செய்யும் நின்னுடைய நல்ல புகழை நினைந்து; குறைத்தலைப் படு பிணன்
எதிர - தலைகள் வெட்டுண்டு குறை யுடலங்களாய் வீழும் பிணங்கள்
தன்னெதிலே குவிய; போர்பு அழித்து - அப் பிணக்குவையாகிய போரை
யழித்து; யானை யெருத்தின் வாள் ம்டலோச்சி - யானைகளாகிய எருதுகளை
வாளாகிய பனைமடல் கொண்டு சூழ்வரச் செலுத்தி; அதரி திரித்த ஆள் உகு
கடா வின் கடா - விடுதலால் தலை வேறு உடல் வேறாகப் பிரிந்து தொக்க
களத்தின்கண்; மதியத்தன்ன என் விசியுறு தடாரி முழுமதிபோன்ற - வாராற்
கட்டப்ட்ட என் தடாரிப் பறையை; அகன்கண் அரிர அகன்ற -
கண்ணதிரும்படி யறைந்து; ஆகுளி தொடாலின் - ஆகுளிப் பறைகை்
கொட்டிக்கொண்டு; பணை மருள் நெடுந்தாள் - பறைபோன்ற நெடிய
கால்களையும்; பல்பிணர்த் தடக்கை - பலவாகிய சருச்சரைகளையுடைய
பெரிய கையையும்; புகர் முக முகவைக்கு வந்திசின் - புகர்பொருந்திய
முகத்தையுமுடைய களிறாகிய பரிசில்பொருட்டு வந்தேன்;