| தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் |
5. | நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் |
| புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றென் அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி எஞ்சா மரபின வஞ்சி பாட |
10. | எமக்கென வகுத்த வல்ல மிகப்பல |
| மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண் டிலம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் |
15. | செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் |
| அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெற லிராம னுடன்புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை |
20. | நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் |
| செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமை யெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே. |