ஓவியர் பெருமான் என்பது ஓய்மான் என மருவிற்று, அருமருந்தன்ன என்பது ‘அருமந்த’ என்பதுபோல. | யானே பெறுகவன் றாணிழல் வாழ்க்கை அவனே பெறுகவென் னாவிசை நுவறல் நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கிற் பின்னைமறத்தோ டரியக் கல்செத் து | 5. | அள்ளல் யாமைக் கூன்புறத் துரிஞ்சும் | | நெல்லமல் புரவி னிலங்க கிழவோன் வில்லி யாதன் கிணயேம் பெரும குறுந்தா ளேற்றைக் கொழுங்க ணல்விளர் நறுநெய் யுருக்கி நாட்சோ றீயா | 10. | வல்ல னெந்தை பசிதீர்த் றீயா | | கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக் கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது விண்டோய் தலைய குன்றம் பின்பட நசைதர வந்தனென் யானே வசையில் | 15. | தாயிறூஉங் குழவி போலத் | | திருவுடைத் திருமனை யதுதோன்று கமழ்புகை வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் குறும்படு குண்டகழ் நீண்மதி லூரே; |
திணை: அது. துறை: பரிசிற்றுறை. ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது:
உரை: அவன் தாணிழல் வாழ்க்கையே யான் பெறுக - அவனது அருணிழலில் வாழும் எனக்கு உண்டாகுக; என் நாவிசை நுவறல் அவனே பெறுக - என் நாவால் புகழ்ந்து பாடப்படும் பாட்டிசையை அவன் ஒருவனே பெறுவானாக; நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் - நெல்லறுக்குங் களமர் தம்முடைய கூரிய அரிவாள் வாய் மழுங்குமாயின், பின்னை - பின்னையும்; மறத்தோடு அரிய - மறங்குன்றாது அரிது வேண்டி; கல் செத்து - தீட்டுக் கல்லாகக் கருதி; அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் - சேற்றிற் படிந்திருக்கும் யாமையின் வளைந்த முதுகோட்டில் தீட்டும்; நெல் லமல புரவின் இலங்கை கிழவோன் - நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுயை மா விலங்கையென்னும் ஊர்க்குத் தலைவனான; வில்லியாதன் கிணையேம் - ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப் பொருநராவோம்; பெரும - பெருமானே; எந்தை - எங்கள் தலைவனான அவன் |