| வறுமைத்துயர் நீங்குமாறு; ................கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த ஆம்பல் - குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பற்பூவைப் போன்ற; தேம்பாய் உள்ளது அம்கமழ் மடருண - தேன் பரந்துள்ளதாகிய கட்டெளிவை அழகிய மணங் கமழும் மடாரிற் பெய்து உண்ணச் செய்து; அருங்கடி வியன்நகர் குறுகல் வேண்டி - அரிய காவலையுடைய அகன்ற தன் பெருமனைக்குள் தான் காண யாம் அணுகுதலை விரும்பி; பாம்புரி அன்ன வடிவின - பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையவாய்; காம்பின் கழைபடு சொலியின் - மூங்கிற்கோலின் உட்புறத்தேயுள்ள தோல் போன்ற; இழை யணி வாரா - நெய்யப்பட்ட இழைகளின் வரிசை யறிய வியலாத; ஒண்பூங் கலிங்கம் உடீஇ - ஒள்ளிய பூவாலே செய்யப்பட்ட ஆடையை யுடுப்பித்து; நுண்பூண் வசிந்து வாங்கு நுசுப்பின் - நுண்ணிய பூண்களை யணிந்து மின்னுப்போன் மின்னி வளைந்த இடையினையும்; அவ்வாங்கு உந்தி - அழகுறச் சுழிந்த கொப்பூழையும்; கற்புடை மடந்தை - கற்பையு முடைய மடந்தையாகிய தன் மனைவி; தற்புறம் புல்ல - தன் புறத்தே புல்லிக் கிடக்க; மெல்லணைக் கிடந்தோன் - மெல்லிய அணைமேற் கிடந்து உறங்கினவன் ,,,எற்பெயர்ந்த - என்னின் நீங்கிய; ................,,,நோக்கி - பார்த்து; ................,,, அதற்கொண்டு - அது கொண்டு; அழித்துப் பிறந்தனெனாகி மீளப் பிறந்தேன் போன்று; அவ்வழி -அவ்விடத்தே; பிறப் பாடுபுகழ் பாடிப்படர்பு அறியேன் - பிறருடைய பாடுதற்கமைந்த புகழைப் பாடிச் செல்லுதலைக் கருதிற்றிலேன்; குறுமுலைக்கு அலமரும் பாலார் வெண்மறி - குறுகிய முலையை யுண்டற் ,,,பொருட்டத்தாயைச் சுற்றித் திரியும் பாலுண்ணும் ஆட்டுக்குட்டி; நரைம கவூகமொடு உகளும் - வெளுத்த முகத்தையுடைய குரங்குக்குட்டி யுடனே தாவும்; வரையமல் - மூங்கில்கள் நிறைந்த;,,,குன்று பல கெழீ இய -.............,,,குன்றுகள் பல பொருந்திய; கான்கொழுகி நாடன்-கானநாடனாகிய; கடுந்தேர் அவியன் என ஒருவனை உமையேன்மன்-கடுகிச் செல்லும் தேர்களையுடைய அவியன் எனப்படும் ஒருவனை யான் எமக்குத் தலைவனாக வுடையேன்; அறான் - அவன் புரவுக்கடனாகிய தன்னறத்தினின்றும் நீங்கான்; வெள்ளியது நிலை எவன்பரிகோ - வெள்ளியாகிய மீன் நிலை பிறழ்ந்து நிற்பது குறித்து இவ்வுலகு என்னாகுமோ என வருந்துவேனல்லேன்; எ -று,
வைகறை யாமத்தில் துயிலெமுவது முறையாயினும் அக்காலத்தே கோழிச் சேவல் கூவுலது சார்பாகக் காட்டி ஒண்பொறிச் சேவல் எடுப்ப என்றும் கிணையின்கண்புறத்தே அதனையறையும் சிறுகோலைக் கட்டி வைப்பது மரபாதலால் நுண்கோற் சிறுகிணை யென்றும் கூறினார், விளைபுலப் பயனை வளம்பட நல்கும் சிறப்புக் குறித்துப் பகடுகளை |