நட்புத் திரிந்து என்னை இகழும் சிறுமை அவர்பால் கிடையாது; இனிமை நிறைந்த குணங்களையுடையர்; உயிரின் நீங்காது பிணிப்புற்ற நண்புடையர்; பொய்யாமை புகழ்தருவதாகையால், புகழைக் கெடுக்கும் பொய்ம்மையை விரும்புவது இலர்; தனது பெயரைச் சொல்லவேண்டு மிடத்து, என்னின் வேறன்மை விளங்க என் பெயரைத் தன் பெயராக என் பெயர் கோப்பெருஞ் சோழன் என்று சொல்லுவர்; இக்காலத்தே இப்பொழுது வாரா தொழியார்; அவர்க்கு ஓர் இடம் ஒழித்து வைப்பீராக என்று கூறினான். அக்கூற்று இப்பாட்டேயாகும்.
| கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும் காண்ட லில்லா திணாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும் அரிதே தோன்ற லதற்பட வொழுகலென் | 5 | றையங் கொள்ளன்மி னாரறிவாளீர் | | இகழ்வில னினிய னியாத்த நண்பினன் புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர் பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த | 10 | காதற் கிழமையு முடைய னதன்றலை | | இன்னதோர் காலை நில்லலன் இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே. |
திணையும் துறையு மவை. அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.
உரை: கேட்டல் மாத்திரையல்லது - நின்னையவன் கேட்டிருக்கும் அளவல்லது; யாவதும் காண்டல் இல்லாது - சிறிது பொழுதும் காண்டல் கூடாது; யாண்டு பல கழிய - பல யாண்டு செல்ல; வழுவின்று பழகிய கிழமையராகினும்-தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும்; அரிது - அரிதே; தோன்றல் - தலைவ; அதற்பட ஒழுகல் - அவ்வழுவாத கூற்றிலேபட ஒழுகுதல்; என்று ஐயங்கொள்ளன்மின் - என்று கருதி ஐயப்படா தொழிமின்; ஆர் அறிவாளீர் - நிறைந்த அறிவினையுடையீர்; இகழ்விலன் - அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய; இனியன் - இனிய குணங்களையுடையன்; யாத்த நண்பினன் - பிணித்த நட்பினையுடையன்; புகழ்கெடவரூஉம் பொய் வேண்டலன் - புகழ் அழிய வரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தன் பெயர் கிளக்குங்காலை - தனது பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது; என்பெயர் பேதைச் சோழன் என்னும் - என்னுடைய பெயர் பேதைமையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும்; சிறந்த காதற்கிழமையும் உடையன் - மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; |