பக்கம் எண் :

418

     
 கொடுத்தோ னெந்தை கொடைமேந் தோன்றல்
நுண்ணூற் றடக்கையி னாமருப் பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
10பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன்...
 வினைப்பக டேற்ற மெழீஇக் கிணைதொடா
நாடொறும் பாடே னாயி னானா
மணிகிளர் முன்றிற் றென்னவன் மருகன்
பிணிமுர சிரங்கும் பீடுகெழு தானை
15அண்ணல் யானை வழுதி
 கண்மா றலீஇயரென் பெருங்கிளைப் புரவே.

     திணை: அது, துறை; இயன்மொழி - சிறுகுடிகிழான் பண்ணனை
மதுரை அளக்கர்ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

     உரை: வெள்ளி தென் புறத்துறைய - வெள்ளியாகிய மீன் தென்றிசையில்
நிற்க;  வினைவயல்  பள்ளம்  வாடிய  பயனில்காலை - விளை  வயல்களும்
நீர்நிலைகளும்  வற்றிய   பயனில்லாத  காலமாகிய வற்கடத்தில்; இரும்பறைக்
கிணைமகன் சென்றவன் - பெரிய பறையாகிய தடாரியை இசைக்கும் பொருநன்
சென்று;   பெரும்பெயர்   சிறுகுடிகிழான்  பண்ணற்   பொருந்திய - பெரிய
புகழையுடைய சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து; தன்நிலை
அறியுநனாக- தனது வறுமைநிலையையறிவித்தானாக; அந்நிலை -
அப்பொழுதே; இடுக்கண் இரியல்போக - அவனுற்ற  பசித்துன்பம் நீங்குமாறு;
உடைய கொடுத்தோன் - தான் உடைய  பொருள்களைக் கொடுத்தான்;
எந்தை - எங்கள் தலைவனும்; கொடை மேந்தோன்றல் - கொடையால்
மேம்பட்ட தோன்றலுமாகிய பண்ணன்; நுணணூல் தடக்கையின் நா
மருப்பாக - நுண்ணிய நூற்பொருளே பெரிய கையாகவும்  நாவே
மருப்பாகவும்;   வெல்லும் வாய்மொழிப் புலவர்க்கு - வெல்லுகின்ற
வாய்மொழியாகிய   களிற்றையுடைய  புலவர்கட்கு; புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் - பண்ணன்  கேட்டிர்  நெல்லாகிய புல்லையுடைய
விளைவயல்களை நல்கும்  பண்ணனையான் கூறக்கேட்பீராக்;...அவன்
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைதொடா - அவனுடைய உழவுவினைக்
குரிய எருதுகளையும் ஏற்றத்தையும் யாழிலிட்டிசைத்துக் கிணைப் பறையைக்
கொட்டி; நாடொறும் பாடேனாயின் - நாளும் பாடா தொழிவேனாயின்;
ஆனா மணிகிளர் முன்றில் - நீங்காத ஆராய்ச்சி மணி கட்டியிருக்கும்
முன்றிலையுடைய; தென்னவன் மருகள் - பாண்டியன் வழித்தோன்றலான;
பிணி முரசு இரங்கும் நீடு கெழு தானை - வாராற்
கட்டப்பட்ட