| அறவை நெஞ்சத் தாயர் வளரும் மறவை நெஞ்சத் தாயி லாளார் அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ் விழவணி வியன்கள மன்ன முற்றத் |
5 | தார்வலர் குறுகி னல்லது காவலர் |
| கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர் மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவென் அரிக்குரற் றடாரி யிரிய வொற்றிப் பாடி நின்ற பன்னா ளன்றியும் |
10 | சென்ற ஞான்றைச் சென்றுபடரிரவின் |
| வந்ததற் கொண்ட நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருந னளியன் றானெனத் தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை முதுநீர்ப் பாசி யன்ன வுடைகளைந்து |
15 | திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ |
| மகிழ்தரன் மரபின் மட்டே யன்றியும் அமிழ்தன மரபி னூன்றுவை யடிசில் வெள்ளி வெண்கலத் தூட்ட லன்றி முன்னூர்ப் பொதியிற் சேர்ந்த மென்னடை |
20 | இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகன்ற |
| அகடுநனை வேங்கை வீகண் டன்ன பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டி பெறுகென் றோனே யுண்டுறை மலையல ரணியுந் தலைநீர் நாடன் |
25 | கண்டாற் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி... |
| வானறி யலவென்ப ரடுபசி போக்கல் அண்ணல் யானை வேந்தர் உண்மையோ வறியலர் காண்பறி யலரே. |