| திணை: அது. துறை ; கடைநிலை. பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
உரை: தண்டுளி பலபொழிந்து எழிலி இசைக்கும் - தண்ணிய நீர்த்துளிகள் பலவற்றையும் சொரிந்து மேகங்கள் முழங்கும்; விண்டு அனைய விண்தோய் பிறங்கல் - மலைபோன்ற வானளாவிய குவியலாய்; முகடுற வுயர்ந்த நெல்லின் - உச்சி யுண்டாக வுயர்வுறக் குவித்த நெல்லாகிய; படுகதரு பெருவளம் மகிழ்வர வாழ்த்திப்றெ்ற - எருதுகளின் பேருழைப்பால் உண்டாகயி பெரும்பொருளை மகி்ழ்ச்சி மிக வாழ்த்திப் பெற்றதை; திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி - திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து; அரியல் ஆர்கையர் உண்டு - கள்ளுண்போர் உடனுண்டு; இனிது உவக்கும் - மிகவும் இன்புறும்; வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென - வேங்கட நாடாகிய வடநாடு வறங்கூர்ந்ததனால்; ஈங்குவந்திறுத்த என் இரும்பேரொக்கல் - இங்கே வந்து தங்கிய என் பெரிய சுற்றம்; தீர்கை விடுக்கும் பண்பின் - இந்நாட்டினின்றும் நீங்குதலைக் கைவிடும் பண்பினையுடையவாய்; முதுகுடி நனந்தலை மூதூர் - பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தையுடைய மூதூரின்கண்; .............வினவலின் - .............கேட்டலால்; இவன் முன்னும் வந்தோன் மருங்கிலன் - இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதவன், பொருநன் - கினணப் பொருநன்; ஆகலின் இன்னும் அளியன் என - ஆதலால் இப்பொழுதும் அளிக்கத் தக்கவன் என்று; நின் உணர்ந்தறியுநர் என் உணர்ந்து கூற - நின்பால் நெருங்கிப் பயின்று நின் உள்ளக் கிடையை யறிந்த சான்றோர் என் நிலைமையினை நன்குணர்ந்தது எனக்கு அறிவிக்க; பெரும் கழியிடத்தே துழவி மீன் பிடித்துண்ணும்; துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும் - நெருங்கிய தூவியையுடைய புதா வென்னும் புள்ளினம் தங்கும்; ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் - தழை செறிந்த புன்னைகளையுடைய செழுவிய நின் நெடுமனையின்கண்; நெஞ்சமர் காதல் நின்வெய்யோளொடு - நெஞ்சமர்ந்த காதலையுடைய நின்னால் விரும்பப்பட்ட மனைவியுடன்; இன்றுயில் பெறுகதில் நீ - இனிய உறக்கத்தை நீ பெறுவாயாக; வளஞ்சால் பதன் அறிந்து துளி பொழிய - நெல்வளம் நிறையும் செவ்வியறிந்து மழைபொழிய; நின்வயல் வேலி ஆயிரம் விளைக - நின் வயல்கள் வேலி ஆயிரமாக விளைக எ- று.
விண்டு, மலை. விண்டோய் பிறங்கலென்றது ஈண்டு நெற்குவியன் மேற்று. விண்டு வனைய வெண்ணெற் போர்வின் (ஐங். 58) என்று பிறரும் |