பக்கம் எண் :

465

     

தொடிமாண் பரூஉ உலக்கை குற்றரிசி - பூணிட்டு மாட்சியுறுவித்த பருத்த
உலக்கையால்  குற்றப்பட்ட  அரிசி  கொண்டாக்கிய  சோற்றை;  காடி
வெள்ளுலைக் கொளீஇ - காடி நீர் பெய்த வெள்ளுலையிற் பெய்து கொண்டு;
நீழலோங்கு சினைமாவின் தீங்கனி நறும்புறி - நீழலுயர்ந்த கிளைகளோடு
கூடிய மாமரத்தின் தீவய கனிகைப் பிசைந்து செய்த நறிய புளிக்குழம்பும்;
மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை பெரிய கரிய வராலிசைச்சியும்
- கோட்டையுடைய சுறா மீனினது துண்டமாகிய  கொழுவிய  இறைச்சியும்;
செறுவின் வள்ளை - வயல்களிற் படர்ந்த வள்ளைக்கீரையும்; சிறுகொடிப்
பாகல் - சிறு கொடியாகிய பாகற்காயும்; பாதிரியூழ் முகை அவிழ்விடுத்தன்ன
- பாதிரியின் முதிர்ந்த அரும்பினது இதழை விரித்தாற்போன்ற; மெய்
களைந்து இனனோடு விரைஇ - தோலைநீக்கி இனமாகியவற்றோடு கலந்து;
ஐதின் - மென்மையுண்டாக; மூழ்ப்பப் பெய்த  முழு   அவிழ்ப்  புழுக்கல் -
மூடும்படியாகப் பெய்த முழுத்த சோறும்; அழுகளிற் படுநர் களியாட வைகின்
- வைக்கோல்களிற் பொழுதெல்லாம் உழைக்கும் களமர் தாமுண்ட கள்ளாற்
பிறந்த மயக்கத்தால் மடிந்திருப்பாராயின்; பழஞ்சோறு அயிலும் - விடியலிற்
பழஞ்சோற்றையுண்ணும்; முழங்கு நீர்ப்படப்பை - முழங்குகின்ற நீர்நலம்
சான்ற   தோட்டங்களையுடைய;    காவிரிக்கிழவன்   -   காவிரியும்
நாட்டையுடையனாகிய; மாயா நல்லிசைக் கிள்ளி வளவன் உள்ளி - கெடாத
நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைந்து; அவன் படர்தும் - அவனை
நோக்கிச் செல்கின்றேம்; பிறர் செல்லேன் செல்லேன் முகம் நோக்கேன்
-பிறர் பால் ஒருகாலும் செல்லேன், பிறருடைய முகத்தை உதவி கருதிப்
பாரேன்; நெடுங்கழைத் தூண்டில் விடுமீன்  நொடுத்து   -   செடிய
மூங்கிலாகிய தூண்டிலாற் பிடித்த மீனை விற்று; கிணை மகள் அட்ட பாவால்
புளிங்கூழ் - கிணைமகள் சமைத்த நீர்த்தர்ப் பரந்த புளிங்கூழை; பொழுது
மறுத்துண்ணும் உண்டயேன் - காலமல்லாத காலத்தில் உண்ணும்
உணவையுடையேன்; அழிவுகொண்டு ஒருசிறை  இருந்தேன்  -  செஞ்சழிந்து
ஒரு  புடையே இருந்தேனாக; என்ன - நின் நல்லூழ் இருந்தவாறென்னே; இனி
- இப்பொழுது; அறவர் அறவன் - அறவோர்களிற் சிறந்த அறவோனும்;
மறவர்  மறவன் - அறவர்க்குள் சிறந்த மறவனும்; மள்ளர் மள்ளன் -
உழவருட் சிறந்த உழவனும், தொல்லோர் மருகன் பழையோருடைய
வழித்தொன்றலு மாகிய அவன் - தாமான் தோன்றிக் கோன்;
இசையிற்கொண்டான் - நின்புகழால் நின்பால் அன்புகொண்டு
விட்டானாகலின்; நசையமுது உண்க என - நீ விரும்பும் செல்வத்தைப்
பெறுவாயாக என அறிந்தோர் கூறவே; மீப் படர்ந்து இறந்து - மேலே
செயற்பாலவற்றை நினைந்து சென்று; வன்கோல மண்ணி -