| | சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன் | 10 | கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் | | தேவ ருலக மெய்தின னாதலின் அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம் இருநிலந் திகிரியாப் பெருமலை | 15 | மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே. |
திணை: அது. துறை: ஆனந்தப்பையுள். அவனை ஐயூர் முடவனார் பாடியது.
உரை: கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; கலம் செய் கோவே - அடுகலம் வனையும் வேட்கோவே; இருள் திணிந்தன்ன குரூஉ - இருள்நீங்கி ஓரிடத்தே செறிந்து நின்றாற் போன்ற நிறமுடைத்தாய்; திரள் பரூஉப் புகை - திரண்ட மிக்க புகை; அகல் இருவிசும்பின் ஊன்றும் - அகலிய பெரிய ஆகாயத்தின்கண் சென்று தங்கும்; சூளை நனந்தலை மூதூர்க்கலம் செய் கோவே - சூளையையுடைய அகலிய இடத்தினையுடைய பழையவூரின்கண் கலம் வனையும் வேட்கோவே; அளியை நீ - இரங்கத்தகுவை நீ; யாங்காகுவை கொல் - என்ன வருத்த முறுவைதான்; நிலவரை சூட்டிய நீணெடுந்தானை - நிலவெல்லையின்கண் பரப்பிய மிக்க பெரிய சேனையினையுடைய; புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை - அறிவுடையோர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழினையும்; விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன- பரந்த சுடரினையுமுடைய ஆதித்தன் வானத்தின்கண் பரந்தாலொத்த; சேண் விளங்கு சிறப்பின் - சேய்மைக்கண்ணே விளங்கும் தலைமையையுடைய; செம்பியர் மருகன் - செம்பியர் மரபினுள்ளான்; கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் - கொடிகள் நுடங்காநின்ற யானையினையுடைய மிகப்பெரிய வளவன்; தேவருலக மெய்தினன் - அவன் தேவருடைய விண்ணுலகத்தை யடைந்தானாகலான்; அன்னோற் கவிக்கும் இடமகன்ற தாழியை; வனைதல் வேட்டனையாயின் -வனைதலை நீ விரும்பினாயாயின்; எனையதூஉம் - எப்படியும்; இருநிலம் திகிரியா- பெரிய நில வட்டம் உருளியாக; பெருமலை மண்ணா - பெரிய மேருமலை மண்ணாக; வனைதல் ஒல்லுமோ நினக்கு - வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு; எ - று.
அடுக்கு விரைவின்கண் வந்தது. கலஞ்செய் கோவே, வளவன் தேவருலக மெய்தினானாதலான், அன்னோற் கவிக்கும் தாழி வனைதல் வேட்டனையாயின் இருநிலம் திகிரியாக, மாமேரு மண்ணாக வனைதல் ஒல்லுமோ? ஒல்லாமையின் யாங்காகுவை; நீ இரங்கத்தக்காய் எனக் கூட்டி |