| | சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே | 5 | பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே | | என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவு நாறு மென்றலை தைவரு மன்னே | 10 | அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ | | இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்றுவீழ்ந் தன்றவன் | 15 | அருநிறத் தியங்கிய வேலே | | ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு (மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் | 20 | றீயாது வீயு முயிர்தவப் பலவே. |
திணையும் துறையு மவை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
உரை: சிறிய கள் பெறினே - சிறிய அளவினையுடைய மதுவைப்பெறின்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கே தருவன், அது கழிந்தது; பெரிய கள் பெறின் - பெரிய அளவினையுடைய மதுவைப் பெற்றானாயின்; யாம் பாட - அதனை யாம் உண்டு பாட; தான் மகிழ்ந்துண்ணும் மன் - எஞ்சிய மதுவைத் தான் விரும்பி நுகர்வான், அது கழிந்தது; சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன் - சோறு எல்லார்க்கும் பொதுவாதலால் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத் தோடுங் கூட வுண்பன், அது கழிந்தது; பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன்மன் - மிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன், அது கழிந்தது; என்பொடு தடிபடு வழியெல்லாம் - என்பொடு கூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும்; எமக்கு ஈயும் மன் - எங்களுக்கு அளிப்பன், அது கழிந்தது; அம்பொடு வேல் நுழை வழி யெல்லாம் - அம்பொடு வேல் |