பக்கம் எண் :

9

     
 இல்லது நிரப்ப லாற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையு மல்லை நீயே யொன்னார்
10ஆரெயி லவர்கட் டாகவு நுமதெனப்
 பாண்கட னிறுக்கும் வள்ளியோய்
பூண்கட னெந்தைநீ யிரவலர் புரவே.

     திணையுந் துறையு மவை. சேரமான் பாமுளூரெறிந்த சோழன்
நெய்தலங்கான இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார்
பாடியது.


    உரை: கழிந்தது பொழிந்தென - கழிந்த காலம் பெய்தேனெனக்
கருதி;வான்கண் மாறினும் - மழை பெய்யாது மாறினும்; தொல்லது
விளைந்தென - முற்காலத்துவிளைந்தேனெனக்கருதி; நிலம் வளம்
கரப்பினும் - நிலம்விளைவையொழியினும்;எல்லாஉயிர்க்கும்
வாழ்க்கைஇல் - எல்லாவுயிர்கட்கும்உயிர் வாழ்க்கையில்லை
அதுபோல;இன்னும்தம்மெனஎம்மனோர் இரப்பின் - இன்னமும்
எமக்குப்பரிசில்தாருமென்றுசொல்லி எம்போல்வார் இரப்பின்;
முன்னும்கொண்டிர்எனநும்மனோர்மறுத்தல்இன்னாது -
அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல்
இன்னாது; அம்ம - கேளாய்; இயல்தேர் அண்ணல் - இயற்றப்பட்ட
தேரையுடையஅண்ணலே;இல்லதுநிரப்பல் ஆற்றாதோரினும் -
இல்லாதபொருளைத்தேடிநிரப்பமாட்டாது  வறுவியோரினும்;
உள்ளிவருநர் நசை இழப்போர் - அவராற் பரிசில் நினைந்து
வரப்படுவார்கொடாராயின்அவ்விரப்போரால்நச்சப்படும்
இன்பத்தை இழப்பர்; அனையையும் அல்லை நீ - தம் வறுமையாற்
கொடுக்கமுடியாமையின் நாணி அவரெதிர் முக நோக்கமாட்டாது
இன்பமிழக்கும்மாந்தர் தன்மையையு மல்லை நீ, இறந்துபடுவை;
ஒன்னார் ஆரெயில் அவர் கட்டாகவும் பகைவரது அரிய அரண்
அவரிடத்ததாகவும் அதனை அழித்துக் கொள்ளுவதன் முன்னே;
நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் - நும்முடைய
தெனப் பாணர்க்குக் கடனாகக் கொடுக்கும் வென்றியோடு கூடிய
வண்மையையுடையோ யாதலான்; எந்தை - எம் இறைவ; நீ இரவலர்
புரவு கடன் பூண் - நீ இரப்போரைப் பாதுகாத்தலை முறைமையாகப்
பரிகரிப்பாயாக; எ - று.


     அனையையுமல்லை யென்பதற்கு இரவலர் வேண்டுமளவும் பாணி
யாது முன்னேயளித்தலின், நசையிழப்போர் தன்மையையுடையாயல்லை
யென்றுமாம். எம்மனோரென்றது பிறரை நோக்கியன் றெனவுணர்க.
“பொழிந்தென,” “விளைந்தென” என்பனவற்றை வினையெச்சமாக்கி
மாறினும் கரப்பினுமென்னும் வினையோடு முடிப்பினுமமையும்.