பக்கம் எண் :

18

 முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர்1 நோய்.

(இ-ள்.)பாம்பு எலாம் -எல்லாப் பாம்புகளும், பல்லினால் நோய் செய்யும் - பிறர்க்குப் பல்லினால்துன்பந்தரும் ; கொல் ஏறு - கொலை பயிலுங் காளை மாடு, குறித்தாரை - தன்னால் குறித்துக் கொள்ளப்பட்டவர்க்கு, கோட்டால் - கொம்புகளால், நோய் செய்யும் - துன்பந்தரும்; மகளிர் - பெண்மக்கள், ஊடி - பிணங்கி, முகத்தால் - தம் முகக்குறிப்பினால், நோய் செய்வர் - துன்பந் தருவர்; முனிவர் - தவமுடையார், தவத்தால் - தமது தவ வலிமையால், நோய் தருகுவர் - துன்பந் தருவர்.

(க-து.) பாம்பு பல்லாலும், ஏறு கொம்பாலும், மகளிர் முகத்தாலும் பிறர்க்குத் துன்பஞ் செய்வர்; முனிவர் தவத்தாற்றுன்பந் தருவர்.

(வி-ரை.) நோய் செயல் - ஒரு சொற்றன்மைத்து: நோய் - துன்பம்; இதற்கு நொ : பகுதி.இனி, ‘கொள்களிறு கோட்டால் நோய் செய்யு' மென்னும் பாடம், களிற்றுக்குக் கோட்டா னோய் செய்தலேயன்றிப் பிறவாறு முண்மையின், சிறவாமை காண்க.

‘தருக்குவர்' பாடமாயின் ‘மிகுவிப்பர்' என்பது பொருள். முனிவர் எல்லா உயிர்களையும் தம்மோடொக்க நோக்குபவராதலால் ‘தருகுவர்' என்றார்.‘பையவே சென்று பாண்டியற்காகவே' எனும் ஞானசம்பந்தப் பெருமான் திருமொழியை நோக்குக.தருகுவர் - கு சாரியை.

(14)

 15. பறைநன்று பண்ணமையா யாழின் - நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து
ஆர்தலின் நன்று பசித்தல் - பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று.

(இ-ள்.)பண் அமையா - பண்ணிசை யமையாத, யாழின் - ‘யாழ்' என்னும் இன்னிசைக் கருவியினும், பறை நன்று - ‘பறை' யென்னும் பேரோசைக் கருவி நன்றாம்;பீடு


(பாடம்) 1 தவத்தில் தருக்குவர்.