பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்

அஃதாவது, இன்முகதோடும் இன்சொல்லோடும் விருந்தோம்பி வேளாண்மை செய்தவர்க்கும் வேறு வகையில் உதவினவர்க்கும் நன்றியறிவுடையராயிருத்தல். " உப்பிட்டவரை உள்ளளவும் நினை." " உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுகிறதா? " என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன.

 

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

 

செய்யாமல் செய்த உதவிக்கு -- தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது - ' மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .

கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .

செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,

"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு"

(211)

என்னுங் குறளாற் பெறப்படுதலால்.