பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்

அஃதாவது, முன் கூடிப்பெற்ற இன்பத்தால் ஒருவரையொருவர் நினைந்து தலைமகள் தன் இல்லத்திலும் தலைமகன் தொலைவான அயவிடத்திலும் தனித்தனி கூற்று நிகழ்த்துதல். இஃது இருவர்க்கும் பொதுவாதலாற் பலர் பாலாற் கூறப்பட்டது; தலைமகள் தன் கண்ணதாகக்கருதிய படர்மிகுதியின் தொடர்ச்சியாதலின், தனிப்படர்மிகுதியின்பின் வைக்கப்பட்டது.

 

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது.

 

(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.)

(இ-ரை.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்-முன்பு கூடி நுகர்ந்த இன்பத்தைப் பின்பு பிரிந்தவிடத்து நினைத்தாலும் அன்றே பெற்றாற்போல நீங்காத பெருமகிழ்ச்சியைத்தருதலால்; கள்ளினும் காமம் இனிது-உண்ட விடத்தல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினுங் காமம் இன்பந்தருவதாயுள்ளது

தலைமகளை மறவாமை கூறியவாறு. முன்பு கண்டார் மகிழ் செய்யும் (குறள்-1090) என்ற காமம் இங்குக் கருதினாலும் காமம் இங்குக் கருதினாலும் மகிழ் செய்யும் என்று கூறப்பட்டது.