(தலைமகனிடமிருந்து தூதுவரக் கண்டாள் சொல்லியது.) காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துதலறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதைக் கொண்டு வந்து காட்டிய கனவிற்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக நான் எதனைச் செய்வேன்! விருந்து என்னுஞ்சொல் விருந்தாளையும் விருந்துணவையுங் குறிக்கும். இங்கு விருந்தென்றது விருந்திற்குப் படைக்குஞ் சிறப்புணவை. கனவிற்குப் படைப்பதொன்றின்மையின், 'யாது செய்வேன்' என்றாள். 'கொல்' அசைநிலை.
|