எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப்பிறப்பு ஈனும் வித்து - எல்லாவுயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பை விளைவிக்கும் வித்து; அவா என்ப - அவா என்று சொல்வர் மெய்ப்பொருள் நூலார். உடம்பு நீக்குங் காலத்து , அடுத்து நுகரவேண்டிய வினையும் அது காட்டும் பிறவி வகுப்புக் குறியும் அவ்வகுப்பின்கண் அவாவும் உயிரின்கண் முறையேதோன்றி, அவ்வுயிரை அவ்வவா, அவ்வகுப்பின்கண் கொண்டு செல்லுமாகலின் , அதனைப் 'பிறப்பீனும்வித்து' என்றார். எல்லாவுயிரும் என்றது விலங்கு , நரகர் , மக்கள் , தேவர் என்னும் நால் வகுப்புயிர்களையும்.
|