பொருட்பால் அரசியல் அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்அஃதாவது,கொண்டபே-ராற்ற லுடையார்க்கு மாகா தளவின்றி யேற்ற கருமஞ் செயல். (மூதுரை, 19) ஆதலின், ஐவகையும் அறுவகையுமான குற்றங்களைத் தன்கண் நீக்கிய அரசன், தன் ஆட்சியைக் குற்றமின்றிச் செவ்வையாக நடாத்துதற்கு, இயற்கை மதிநுட்பத்தோடு நூலறிவும் சூழ்ச்சித் திறனும் தூயவொழுக்கமு முடைய பெரியாரைத் தன் அமைச்சராகத்துணைக்கொள்ளுதல். அதிகார, முறைமையும் இதனால் அறியப்படும். பரிமேலழகர் "பேரறிவுடையராவார் அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற் குரிய ---------------- புரோகிதர்" என்று இங்கும் தம் ஆரியநஞ்சு நிறைந்த நெஞ்சைக் காட்டியுள்ளார். |