நாநலம் என்னும் நலன் உடைமை -நாநலம் என்று அறிவுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம்; அந்நலம் யா நலத்து உள்ளதூஉம் அன்று - அந்நன்மை வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும் அடங்காது தனிப்பட்டதாம். நாவின் நலம் நாநலம். அது நாவின் நன்மையும் வன்மையுங் கலந்ததாம். நன்மை பிறருக்கு நன்மை செய்வதும் வன்மை பிறரை வயப்படுத்துவது மாகும். இப்பேறு தனிப்பட்டதாதலின், 'யாநலத்துள்ளதூஉமன்று' என்றார். 'உள்ளதூஉம்' இன்னிசையள பெடை.
|