துணைநலம் ஆக்கம் தரும் - ஒருவனுக்குத்துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் - ஆயின் , வினையின் நன்மையோ செல்வம் உட்பட ஒருவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தரும். 'வேண்டிய வெல்லாம்' என்பன, இம்மையில் அறம் பொருளின்பமும் மறுமையில் புகழ் விண்ணின்பம் வீட்டின்பமு மாம். பிறர் துணையினுந் தூய்மை சிறந்ததென வினைத்தூய்மையின் சிறப்புக் கூறப்பட்டது. 'தரூஉம்' இசைநிறையளபெடை.
|