தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 6 முதல் 10 வரை
|
||
6. | ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே; பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே; வாய்ப்பு உடையராகி, வலவைகள் அல்லாரைக் காப்பு அடையக் கோடல் இனிது. |
உரை |
7. | அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே; பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே; தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல், கொண்டு அடையான் ஆகல் இனிது. |
உரை |
8. | ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே; தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக் கார் வரைபோல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே; ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை, பேதுறார், கேட்டல் இனிது. |
உரை |
9. | தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே; அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே; பங்கம் இல் செய்கையர் ஆகி, பரிந்து, யார்க்கும் அன்புடையர் ஆதல் இனிது. |
உரை |
10. | கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே; நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே; மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல் எனை மாண்பும் தான் இனிது நன்கு. |
உரை |