தொடக்கம் | ||
இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 21 முதல் 25 வரை
|
||
21. | பிறன்கைப் பொருள் வௌவான் வாழ்தல் இனிதே; அறம் புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே; மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறம் தெரிந்து வாழ்தல் இனிது. |
உரை |
22. | வருவாய் அறிந்து வழங்கல் இனிதே; ஒருவர் பாங்கு ஆகாத ஊக்கம் இனிதே; பெரு வகைத்துஆயினும்; பெட்டவை செய்யார், திரிபு இன்றி வாழ்தல் இனிது. |
உரை |
23. | காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே; ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச் சூதரைச் சோர்தல் இனிது. |
உரை |
24. | வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே; ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே; இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. |
உரை |
25. | ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே; கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே; நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப் புல்லா விடுதல் இனிது. |
உரை |