இனியவை நாற்பது பாடல் தொகுப்பு 26 முதல் 30 வரை
 
26. நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல்.
உரை
   
27. தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின், வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது.
உரை
   
28. ஆற்றானை, ‘ஆற்று!’ என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்.
உரை
   
29. கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
‘எளியர், இவர்! என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது.
உரை
   
30. நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றில் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
‘அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத
நன்றியின், நன்கு இனியது இல்.
உரை