பாட்டு முதல் குறிப்பு
'யான் பிரியத் தலைமகள் ஆற்றுமோ? நீ அறிவாயாக!'என்ற தலைமகற்குத்
தோழி சொல்லியது
12.
முரி பரல ஆகி, முரண் அழிந்து தோன்றி,
எரி பரந்த கானம் இயை பொருட்குப் போவீர்;
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார் யார், தேரும் இடத்து?
உரை