'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
15. சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல்,-தோழி!-
முறி எழில் மேனி பசப்ப, அருள் ஒழிந்து,
ஆர் பொருள் வேட்கையவர்?