பாட்டு முதல் குறிப்பு
மகள் போக்கிய நற்றாய் சொல்லியது
20.
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ் சுரம்,
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டு அஞ்சி,
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள்
ஆற்றும்கொல், ஐய நடந்து?
உரை