பின்னின்ற தலைமகனைக் காவல் மிகுதி சொல்லிச் சேட்படுத்தது
5. விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார்
வரையிடை வாரன்மின்;-ஐய!-உரை கடியர்;
வில்லினர்; வேலர்; விரைந்து செல் அம்பினர்;
கல்லிடை வாழ்நர் எமர்.