பாட்டு முதல் குறிப்பு
19.
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்; ஒறுத்து ஆற்றின்,-
வான் ஓங்கு உயர் வரை வெற்ப!-பயம் இன்றே;
தான் நோன்றிட வரும், சால்பு.
உரை