தொடக்கம் |
|
|
141. | அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்- முயல் விட்டுக் காக்கை தினல். | |
|
உரை
|
|
|
|
|
142. | நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும் பேணா அறிவு இலா மாக்களைப் பேணி, ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்- புழுப் பெய்து புண் பொதியுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
143. | பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார், நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க! வரம்பு இல் பெருமை தருமே;-பிரம்பூரி என்றும் பதக்கு ஏழ் வரும். | |
|
உரை
|
|
|
|
|
144. | தமர் அல்லவரைத் தலையளித்தக்கண்ணும், அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்;- சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக்கண்ணும், உவர் நிலம் உட்கொதிக்குமாறு. | |
|
உரை
|
|
|
|
|
145. | ஒல்லாது ஒன்று இன்றி, உடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!- கடலுள்ளும் காண்பவே, நன்கு. | |
|
உரை
|
|
|
|
|
146. | கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து, நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தொடு பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே- நீர் குறிதாகப் புகல். | |
|
உரை
|
|
|
|
|
147. | பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன் தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து, ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்- ஆடு மணைப் பொய்க் காலே போன்று. | |
|
உரை
|
|
|
|
|
148. | ‘முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரைப் பின் நலிதும்’ என்று உரைத்தல் பேதைமையே; பின் நின்று,- காம்பு அன்ன தோளி!-கலங்கக் கடித்து ஓடும் பாம்பு பல் கொள்வாரோ இல். | |
|
உரை
|
|
|
|
|
149. | நெறியால் உணராது, நீர்மையும் இன்றி, சிறியார், ‘எளியரால்!’ என்று, பெரியாரைத் தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்- திங்களை நாய் குரைத்தற்று. | |
|
உரை
|
|
|
|
|
150. | ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும், வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா; தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி. | |
|
உரை
|
|
|
|