தொடக்கம் |
|
|
201. | மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர், கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி, பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர், தம் மேலே வீழப் பனை. | |
|
உரை
|
|
|
|
|
202. | மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத் தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே துடும்பல் எறிந்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
203. | சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும், பட்ட இழுக்கம் பலவானால், பட்ட பொறியின் வகைய, கருமம் அதனால்,- அறிவினை ஊழே அடும். | |
|
உரை
|
|
|
|
|
204. | கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும், என்றும், சிறியார்கண் என்னானும் தோன்றாதாம்; ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்- குன்றின்மேல் இட்ட விளக்கு. | |
|
உரை
|
|
|
|
|
205. | ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை, ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப் படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்- தொடற்பாலார்கண்ணே தொடும். | |
|
உரை
|
|
|
|
|
206. | முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும், இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம் நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
207. | அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று; சிறியர் எனற்பாடும் செய்யும்;-எறி திரை சென்று உலாம் சேர்ப்ப!-குழுவத்தார் மேயிருந்த, என்று ஊடு அறுப்பினும், மன்று. | |
|
உரை
|
|
|
|
|
208. | இல்வாழ்க்கையானும் இலிங்கானும் மேற்கொள்ளார், நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம் ஒருதலையாச் சென்று துணியாதவரே- இரு தலையும் காக் கழிப்பார். | |
|
உரை
|
|
|
|
|
209. | முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும் குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!- மன்றத்து மையல் சேர்ந்தற்று. | |
|
உரை
|
|
|
|
|
210. | தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால், நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல்,- மான் அமர்க் கண்ணி!-மறந்தும் பரியலரால்;- கானகத்து உக்க நிலா. | |
|
உரை
|
|
|
|