தொடக்கம் |
|
|
211. | உழந்ததூஉம் பேணார், ஒறுத்தமை கண்டும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,- தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!- முழம் குறைப்பச் சாண் நீளுமாறு. | |
|
உரை
|
|
|
|
|
212. | உலப்பு இல் உலகத்து உறுதியே நோக்கிக் குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்- மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல். | |
|
உரை
|
|
|
|
|
213. | சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப்பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?- எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். | |
|
உரை
|
|
|
|
|
214. | நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல், வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகும்;- தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி, நூறாயிரவர்க்கு நேர். | |
|
உரை
|
|
|
|
|
215. | சிறந்து, நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே, சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. | |
|
உரை
|
|
|
|
|
216. | அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும், ‘இடம் கண்டு அறிவாம்’ என்று எண்ணி இராஅர்;- மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர் கடம் கொண்டும் செய்வர் கடன். | |
|
உரை
|
|
|
|
|
217. | ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும், ஒப்புரவு ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும் போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும், ஏற்றுக் கன்று ஏறாய் விடும். | |
|
உரை
|
|
|
|
|
218. | அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தானை, கொண்டான், படுத்து, ‘ஏழையாம்!’ என்று போகினும் போக!- அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும் கொடுத்து, ஏழை ஆயினார் இல். | |
|
உரை
|
|
|
|
|
219. | திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால், சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல், நீர் அற, நீர்ச் சார்வு அறும். | |
|
உரை
|
|
|
|
|
220. | உறுகண் பலவும் உணராமை கந்தா, தறுகண்மை ஆகாதாம் பேதை, ‘தறுகண் பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது’ என்று எண்ணி, அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. | |
|
உரை
|
|
|
|