311. மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!-
மரத்தின் கீழ் ஆகா, மரம்.
உரை
   
312. முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-
முதல் இலார்க்கு ஊதியம் இல்.
உரை
   
313. தெற்றப் பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு.
உரை
   
314. அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,
இடையன் எறிந்த மரம்.
உரை
   
315. ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
‘நோக்குமின்!’ என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-
காக்கையைக் காப்பு இட்ட சோறு.
உரை
   
316. தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,
‘அடுத்தர’ என்றாற்கு, ‘வாழியரோ!’ என்றான்;
தொடுத்து, ‘இன்னர்’ என்னலோ வேண்டா;-கொடுப்பவர்
தாம் அறிவர், தம் சீர் அளவு.
உரை
   
317. ‘வரை புரை வேழத்த, வன் பகை’ என்று அஞ்சி,
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-
திரை அவித்து, ஆடார் கடல்.
உரை
   
318. ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண் பற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-
பெண் பெற்றான் அஞ்சான், இழவு.
உரை
   
319. முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர்.
உரை
   
320. காப்பு இறந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளின், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், ஈத்தவை
மேவின், பரிகாரம் இல்.
உரை